கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் தனிநபர் பிரச்னை, பொதுப் பிரச்னைகள் தொடர்பாக 504 கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் வழங்கினர். பெறப்பட்ட மனுக்களை தீர ஆராய்ந்தும், கள ஆய்வு செய்தும், விதிமுறைகளுக்கு உள்பட்டும் துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டு, மனுதாரருக்கு தீர்வு வழங்க வேண்டுமென அலுவலர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சார்பில், முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட 2 பேருக்கு தலா ரூ.20 ஆயிரம் மதிப்பிலான சிறப்பு சக்கர நாற்காலிகளை ஆட்சியர் வழங்கினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கோ.விஜயா, தனித் துணை ஆட்சியர் கூஷ்ணாதேவி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ஜி.ராமு, மாவட்ட வழங்கல் அலுவலர் தினேஷ் உள்பட அனைத்துத் துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.