சிதம்பரம் நடராஜர் கோயிலில் சபாபதி சங்கீத ஞான அறக்கட்டளை சார்பில், ஆயிரங்கால் மண்டபம் எதிரே உள்ள நடனப் பந்தலில் சித்திரை தமிழ்ப் புத்தாண்டையொட்டி, ஒரே நேரத்தில் 380 நாட்டிய மாணவிகளின் நாட்டிய நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் 6 வயது முதல் 68 வயது வரையிலான நாட்டியக் கலைஞர்கள் பங்கேற்று நாட்டியம் ஆடினர். பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த நாட்டிய நிகழ்ச்சியை கோயிலுக்கு வந்த பக்தர்கள் பலர் பார்த்து ரசித்தனர்.