விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அண்ணாகிராமம் மைய ஒன்றியம் சார்பில், அம்பேத்கரின் 127-ஆவது பிறந்த நாள் பொதுக் கூட்டம் மேல்பட்டாம்பாக்கத்தில் சனிக்கிழமை இரவு நடைபெற்றது. கட்சியின் ஒன்றியச் செயலர் அருள்செல்வன் தலைமை வகித்தார். ஒன்றியப் பொருளாளர் பெருமாள், துணைச் செயலர்கள் பாண்டியன், கிருஷ்ணா, தொல்காப்பியன், மருவேல், ஜோதிபாசு, மணிகண்டன், கண்ணன், உதயநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராகக் கட்சியின் மாநிலக் கருத்தியல் பரப்புச் செயலர் சிபிச்சந்தர், கடலூர் நாடாளுமன்றத் தொகுதிச் செயலர் பா.தாமரைச்செல்வன் ஆகியோர் பங்கேற்றுப் பேசினர்.
கட்சியின் மாவட்டச் செயலர் சா.முல்லைவேந்தன், மாநில அமைப்புச் செயலர் தி.ச.திருமார்பன், பொருளாளர் கே.கெய்க்வாட்பாபு, மாநிலச் செயற்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன், நகரச் செயலர் புலிக்கொடியன், மாவட்ட அமைப்பாளர் ம.சுரேஷ்பாபு, நகரப் பொருளாளர் ஓவியர் பகலவன் நிர்வாகிகள் தினேஷ், ராஜ்குமார், முகமது யாசீன், சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக, கட்சியின் பேரூராட்சிச் செயலர் முகமது இத்ரீஸ் வரவேற்றார். நிர்வாகி குமார் நன்றி கூறினார்.