சிதம்பரத்தில் இந்து முன்னணி சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வடக்குவீதி தலைமை தபால் நிலையம் முன் நடைபெற்ற
இந்த நிகழ்வுக்கு, மாவட்ட பொதுச் செயலர் தங்கவேல் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் வெங்கடேசன், செயற்குழு உறுப்பினர்கள் சக்திவேல், ரவிச்சந்திரன், மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொறுப்பாளர் ராஜன் வரவேற்றார். தமிழ்நாடு மாநிலச் செயலர் சனில்
குமார் சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் அயோத்தியில் ராமர் கோயிலை உடனடியாக கட்ட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். சிவலோகநாதன் நன்றி
கூறினார்.