வடலூர் போக்குவரத்து காவல் துறை சார்பில், கீழக்கொல்லையில் இயங்கும் கல்வியியல் கல்லூரியில் சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வுக் கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, வடலூர் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் வெங்கடேசன் தலைமை வகித்தார். அவர் பேசுகையில், கல்லூரிக்கு வரும் மாணவிகள் விலை உயர்ந்த அணிகலன்களை அணிந்து வரக் கூடாது. வாகனம் ஓட்டும்போது அவசியம் தலைக் கவசம் அணிய வேண்டும். சாலை விதிகளை மதிக்க வேண்டும் என அறிவுறுத்தினார். சாலை விதிகளை மதிப்போம்; விபத்துகளை தவிர்ப்போம் என அனைவரும் உறுதி மொழி ஏற்றனர்.நெடுஞ்சாலை ரோந்து சிறப்பு உதவி ஆய்வாளர் யோகானந்தம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.