பண்ருட்டி, திருவதிகையில் அமைந்துள்ள ஹேமாம்புஜ நாயகி சமேத சரநாராயணப் பெருமாள் கோயிலில், அத்யயன மஹோத்ஸவம் சனிக்கிழமை (டிச.8) தொடங்கி 27-ஆம் தேதி வரை மொத்தம் 20 நாள்களுக்கு நடைபெற உள்ளது.
இதில், முதல் 10 நாள்கள் "திருமொழித்திருநாள் (பகல்பத்து)', அடுத்த 10 நாள்கள் "திருவாய்மொழித் திருநாள்(இராப்பத்து)' உத்ஸவமாக நடைபெற உள்ளது.
உத்ஸவத்தின் சிறப்பு அம்சமாக வருகிற 18-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 5.30 மணியளவில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீபரமபதவாசல் (சொர்க்கவாசல்) திறப்பு நிகழ்வு நடைபெறும்.
ஜன.1-ஆம் தேதி ஆங்கிலப் புத்தாண்டு அன்று மூலவர் பெரிய பெருமாள் முத்தங்கி சேவையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.