சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக நுண்கலைப்புலம், இசைத் துறை சார்பில் ஆய்வுக் கோவை நூல் வெளியீட்டு விழா பல்கலைக்கழக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்த இரு துறைகள் சார்பில் கடந்த பிப்.2, 3 ஆகிய தேதிகளில் நாட்டியம், இசை தொடர்பான பன்னாட்டு மாநாடு நடைபெற்றது. இது தொடர்பான ஆய்வுக் கோவை நூல் வெளியிடப்பட்டது. 20, 21-ஆம் நூற்றாண்டுகளில் நடனம், இசை மற்றும் ஊடகங்கள்-ஆய்வுக்கோவை' என்ற தலைப்பிலான இந்த நூலை பல்கலைக்கழக துணைவேந்தர் செ.மணியன் வெளியிட, பதிவாளர் கே.ஆறுமுகம், இந்திய மொழிப்புல முதன்மையர் வி.திருவள்ளுவன், தொலைதூரக் கல்வி இயக்குநர் எம்.அருள், கடல்வாழ் உயிரியல் புல முதன்மையர் ஏ. சண்முகம், நூலின் பதிப்பாசிரியர்கள் நுண்கலைப்புல முதன்மையர் கே.முத்துராமன், நடனத் துறை உதவிப் பேராசிரியர் ஏ.சித்ரா பெற்றுக்கொண்டனர்.