கார் மோதியதில் பெண் உயிரிழந்தார். விருத்தாசலம் அருகே உள்ள மணவாளநல்லூரைச் சேர்ந்த கலியமூர்த்தி மனைவி வேம்பாயி (58). இவர், வெள்ளிக்கிழமை அதேப் பகுதியில் உள்ள கோயிலில் சாமி கும்பிட்டு விட்டு கடலூர் - சேலம் சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக, சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள மும்முடியைச் சேர்ந்த ரா.அருள்குமார் என்பவர் ஓட்டிவந்த கார் வேம்பாயி மீது மோதியது.
இதில், அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து விருத்தாசலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.