சிதம்பரம், அண்ணாமலை நகர் காவல் கோட்டத்துக்கு உள்பட்ட பதற்றமான பகுதிகளை மத்திய விரைவுப் படையினர் புதன்கிழமை ஆய்வு செய்தனர். உதவி கமாண்டர் நிர்மல் தலைமையில் வந்த 20 பேர் கொண்ட குழுவினர் சிதம்பரம் அண்ணாமலை நகர் காவல் நிலையத்துக்கு வந்து, அங்குள்ள பதற்றமான பகுதிகள் குறித்து கேட்டறிந்தனர். பின்னர், காவல் ஆய்வாளர்கள் குமார், வீரமணி ஆகியோருடன் அந்தப் பகுதிகளுக்குச் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.