கடலூர் தேவனாம்பட்டினம் அரசு பெரியார் கலைக் கல்லூரியில் தமிழ் இலக்கிய மன்ற தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு கல்லூரி முதல்வர் ப.ரா.ராஜகுமார் தலைமை வகித்தார். தமிழ்த் துறைத் தலைவர் ப.குமரன் வரவேற்றார். முன்னாள் எம்எல்ஏ கோ.அய்யப்பன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, தமிழ் இலக்கிய மன்றத்தை தொடக்கி வைத்து, மாணவர்களுக்கு புத்தகங்களை வழங்கி சிறப்புரையாற்றினார். தமிழ்த் துறை முன்னாள் தலைவர் அ.அர்த்தநாரி இலக்கிய பேருரையாற்றினார்.