குறிஞ்சிப்பாடி வட்டம், வெங்கடாம்பேட்டை வேணுகோபால ஸ்வாமி கோயில் பிரமோத்ஸவ விழா கொடியேற்றம் சனிக்கிழமை நடைபெற்றது.
பழைமையான இந்தக் கோயிலில் பிரம்மோத்ஸவ விழா நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்பேரில், சனிக்கிழமை காலை 8 மணியளவில் கொடியேற்றம் நடைபெற்றது. முன்னதாக வேணுகோபால சுவாமி சிறப்பு அலங்காரத்தில் கொடி மரம் அருகே எழுந்தருளினார். நிகழ்ச்சியில் ஜெர்மன் பாஸ்கர ஸ்வாமிகள் மற்றும் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.