கடலூர் மாவட்ட உழவர் பேரியக்க நிர்வாகக் குழு கூட்டம் கடலூரில் அண்மையில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு, பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலர் பழ.தாமரைக்கண்ணன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் சண்.முத்துக்கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். உழவர் பேரியக்க மாநில துணைச் செயலர் இளவரசன் வரவேற்றார். மாநிலத் தலைவர் ஆலயமணி பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில், மாநில துணைத் தலைவர் கணபதி, மாவட்டச் செயலர் சக்திவேல், மாவட்ட தலைவர்கள் குமரவேல், விஷ்ணு, துணைத் தலைவர் விநாயகமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாவட்ட துணைச் செயலர் குணசேகர் நன்றி கூறினார்.