மத்திய அரசின் தரைவழிப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை சார்பில் கனரக சரக்கு வாகனங்கள், தேசிய அனுமதிச் சீட்டு பெற்ற சரக்கு வாகனங்களுக்கு திருத்தப்பட்ட அச்சு எடை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என சிதம்பரம் வட்டாரப் போக்குவரத்து அதிகாரி ஆர்.இளமுருகன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சிதம்பரம் மற்றும் விருத்தாசலம் அலுவலக எல்லைக்குள்பட்ட கனரக சரக்கு வாகன உரிமையாளர்கள், தேசிய அனுமதிச் சீட்டு பெற்ற வாகன உரிமையாளர்கள் தங்களது வாகனப் பதிவுச் சான்று
(தஇ), அனுமதிச் சீட்டு (டங்ழ்ம்ண்ற்) ஆகியவற்றை சிதம்பரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு கொண்டு வந்து உரிய திருத்தங்களை 30.9.2018-க்குள் செய்துகொள்ள வேண்டும். வாகனத்தின் எடை மாற்றத்துக்கான கட்டணம், அனுமதி சீட்டில் எடை மாற்றத்துக்கான கட்டணம், வித்தியாச வரி ஆகியவற்றை 30-9-2018-க்குள் செலுத்த வேண்டும் என அதில் தெரிவித்துள்ளார்.