சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக இசைத் துறையில், "கர்நாடக இசை மற்றும் இசைக் கலைஞர்களின் வளர்ச்சிக்கு அகில இந்திய வானொலியின் பங்கு' என்னும் தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவு அண்மையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில், புதுதில்லி அகில இந்திய வானொலி நிலைய கௌரவ ஆலோசகர் வாகீஷ் பங்கேற்று, அகில இந்திய வானொலியின் கர்நாடக இசை சேவை பற்றி சொற்பொழிவாற்றினார். நுண்கலைப் புல முதல்வர் கே.முத்துராமன் தலைமை வகித்தார்.
முன்னதாக, இசைத் துறைத் தலைவர் டி.அருள்செல்வி வரவேற்றார். உதவிப் பேராசிரியர் வி.எல்.வி. சுதர்சன் அறிமுகவுரையாற்றினார். நுண்கலை மன்ற ஒருங்கிணைப்பாளர் ஆர்.ஜெய்சங்கர் நன்றி கூறினார்.