சிதம்பரத்தில் நாளை திமுக ஆர்ப்பாட்டம்

சிதம்பரம் நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து திமுக சார்பில் புதன்கிழமை (பிப்.20) ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அந்தக் கட்சியின் நகரச் செயலர் கே.ஆர்.செந்தில்குமார் தெரிவித்தார்.

சிதம்பரம் நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து திமுக சார்பில் புதன்கிழமை (பிப்.20) ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அந்தக் கட்சியின் நகரச் செயலர் கே.ஆர்.செந்தில்குமார் தெரிவித்தார்.

 இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: 

சிதம்பரம் நகராட்சி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் சிதம்பரம் நகரில் மேற்கொள்ளப்பட்ட புதைச் சாக்கடை திட்டத்தில் முறைகேடு, குடிநீரில் கலக்கும் கழிவுநீர், குண்டும், குழியுமான சாலைகள், வீட்டுவரி உயர்வு, ஆக்கிரமிப்பு என்ற பெயரில் 300 வீடுகளை இடித்தது ஆகியவற்றைக் கண்டித்து நகர திமுக சார்பில் சிதம்பரம் வடக்குரத வீதி தலைமை தபால் நிலையம் முன் ஆர்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெறுகிறது. ஆர்ப்பாட்டத்தில் கட்சியினர், பொதுமக்கள் திரளாகக் கலந்துகொள்ள வேண்டும் என அதில் கேட்டுக்கொண்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com