கடலூர் மாவட்ட சாய்ஜி ரோல்பால் மாணவர் சங்கம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான ரோல்பால் போட்டி (படம்) அண்மையில் நடைபெற்றது.
விருத்தாசலம் ஜெயப்பிரியா வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளியில் நடைபெற்ற இந்தப் போட்டியை, பள்ளி தாளாளர் சி.ஆர்.ஜெயசங்கர் தலைமை வகித்து தொடக்கி வைத்தார். இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்று விளையாடினர்.
மாவட்ட ரோல்பால் சங்கத் தலைவர் லெட்சுமணராஜ், செயலர் கோவிந்தராஜ், பள்ளி முதல்வர் ஸ்ரீலதா, நிர்வாக அலுவலர் சேதுராமன், மக்கள்-தொடர்பு அலுவலர் ஞானப்பிரகாசம் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்தப் போட்டியானது ஏசியா புக் ஆப் ரெக்கார்டு மற்றும் இந்தியா புக் ஆப் ரெக்கார்டு பதிவுக்காக இந்தியா முழுவதும் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டது.