பண்ருட்டி, திருவதிகையில் உள்ள ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் ஆங்கிலப் புத்தாண்டு விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
இந்த இல்லத்தில் தங்கியுள்ளவர்களுக்கு அண்ணாகிராமம் ஒன்றிய மதிமுக செயலர் எஸ்.கே.வெங்கடேசன் கேக், பிஸ்கேட், பழங்களை வழங்கினார் (படம்). முதியோர் இல்ல நிர்வாகி மு.தியாகராஜன் மகாலட்சுமி, உதவி மேளாளர் டி.லீமாரோஸ், மதிமுக நிர்வாகிகள் சி.பன்னீர்செல்வம், கே.ரவிக்குமார், சபரிநாதன், ஏ.சுதன், சி.குகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.