பைக் மீது கார் மோதல்: புதுமாப்பிள்ளை சாவு

வந்தவாசி அருகே பைக் மீது கார் மோதியதில் புதுமாப்பிள்ளை உயிரிழந்தார்.

வந்தவாசி அருகே பைக் மீது கார் மோதியதில் புதுமாப்பிள்ளை உயிரிழந்தார்.
வந்தவாசியை அடுத்த ஆரியாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சொக்கலிங்கம் மகன் பழனி (28). இவரது மனைவி அமுதவல்லி (22). இவர்களுக்கு திருமணமாகி 6 மாதங்கள் ஆகின்றன.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு பழனி இரு சக்கர வாகனத்தில் வந்தவாசிக்குச் சென்று தனது டிராக்டருக்கு டீசல் வாங்கிக்கொண்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். வந்தவாசி - விளாங்காடு சாலையில் சளுக்கை கூட்டுச்சாலை அருகே சென்றபோது, எதிரே வந்த கார் பழனியின் இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில், அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து அமுதவல்லி அளித்த புகாரின்பேரில், வந்தவாசி வடக்கு போலீஸார் 
வழக்குப் பதிந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com