என்எல்சி அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்கம் சார்பில் நெய்வேலி மெயின் பஜார், காமராஜர் சிலை அருகே தெருமுனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு சங்க பொருளாளர் யு.தேவானந்தன் தலைமை வகித்தார். செயலர் ராம.உதயகுமார், தலைவர் பி.அபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதிமுக நகர துணைச்செயலர் பாலசுப்பிரமணியன் வரவேற்றார். நிர்வாகிகள் தமிழ்செல்வன், கணேசன், பூபதி, பாலு மற்றும் துணைத் தலைவர்கள், பகுதிச் செயலர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் ஊதிய மாற்று ஒப்பந்தத்தில் உள்ள குறைபாடுகள் குறித்து விளக்கிப் பேசினர். நிர்மலா கூட்டுறவுச் சங்க இயக்குநர் தனவேல் நன்றி கூறினார்.