சிதம்பரத்தைச் சேர்ந்த மருத்துவர் ச.அசோகனுக்கு சாகித்ய அகாதெமியின் சாகித்ய ரத்னா விருது வழங்கப்பட்டது.
ஏழை மக்களுக்கு மிகவும் குறைந்த செலவில் மருத்துவ சேவை அளிப்பதற்காக இவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இவர் சுமார் 30 ஆண்டுகளாக சிதம்பரத்தில் மருத்துவமனை நடத்தி வருகிறார். தன்னிடம் மருத்துவம் பார்க்க வரும் நோயாளிகளிடம் பணம் இல்லை என்றால், அந்த நோயாளிக்கு உணவும், பேருந்துக்கும் பணமும் கொடுத்து அனுப்புவார். இவருக்கு சொந்தமாக வீடோ, சொந்த மருத்துவமனை கட்டடமோ கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.