சுவாமி சகஜானந்தாவால் உருவாக்கப்பட்ட சிதம்பரம் அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அவரது 129-ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் ஆர்.குருநாதன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை நிதி ஒடுக்கீட்டு குழு உறுப்பினர் தில்லை சீனு பங்கேற்று சுவாமி சகஜானந்தா உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். கேக் வெட்டி மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. விடுதி காப்பாளர் எஸ்.பழனிவேல், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.