சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம், மிஸ்ரிமல் மகாவீர் சந்த் ஜெயின் அறக்கட்டளை சார்பில், அரசுக் கல்லூரி மாணவருக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, சென்டரல் ரோட்டரி சங்கத் தலைவர் எம்.தீபக்குமார் தலைமை வகித்து, சி.முட்லூர் அரசு கலைக் கல்லூரியில் பி.எஸ்சி. கணினி அறிவியல் பயிலும் ஏழை மாணவர் முகமது ஜின்னாவுக்கு ரூ.3,000 கல்வி உதவித் தொகையை வழங்கினார் (படம்). நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் வெ.ரவிச்சந்திரன், ரா.சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.