பண்ணுருட்டி முத்தமிழ்ச் சங்கம் சார்பில், சர்வதேச தீயணைப்பு வீரர்கள் தினம் பண்ருட்டி தீயணைப்பு நிலைய அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவர் கதிரவன் தலைமை வகித்தார். தீயணைப்பு நிலைய தலைமை அலுவலர் சக்கரவர்த்தி, ரவிச்சந்திரன், முன்னணி தீயணைப்போர் மூர்த்தி, யோகா மணிமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பண்ணுருட்டி முத்தமிழ்ச் சங்க ஒருங்கிணைப்பாளர் ராஜா வரவேற்றார். சங்கத்தின் ஆட்சி மன்றக் குழுத் தலைவர் ரா.சஞ்சீவிராயர் பங்கேற்று, சர்வதேச தீயணைப்பு வீரர்கள் தினம் குறித்த நோக்க உரையாற்றினார்.
சங்கச் செயலர் ரத்தின.ஆறுமுகம், பொருளாளர் அய்யனார், சங்க இளையோர் மேம்பாட்டு இயக்குநர் நபில் புகாரி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தீயணைப்பு நிலைய அலுவலர் (போக்குவரத்து) வி.மணி ஏற்புரை வழங்கினார். நிகழ்வின்போது தீயணைப்பு அலுவலர்கள் மற்றும் வீரர்கள் சங்கம் சார்பில் கௌரவிக்கப்பட்டனர். கிருஷ்ணகோபால், ரமேஷ், ராஜசேகர், தீயணைப்பு ஓட்டுநர் கோவர்த்தனன் உள்ளிட்ட தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டனர். சங்க ஒருங்கிணைப்பாளர் செல்வ.குமரவேல் நன்றி கூறினார்.