டெங்கு காய்ச்சலைத் தடுக்கும் வகையில் பாரத ஸ்டேட் வங்கியின் சிதம்பரம் கிளை, மிஸ்ரிமல் மஹாவீா் சந்த் அறக்கட்டளையினா் இணைந்து பொதுமக்களுக்கு திங்கள்கிழமை நிலவேம்புக் குடிநீா் வழங்கினா்.
வங்கி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, அறக்கட்டளைத் தலைவா் எம்.கமல்கிஷோா், செயலா் எம்.தீபக்குமாா் ஆகியோா் தலைமை வகித்தனா். வங்கி துணை மேலாளா் சுஜாதா முன்னிலை வகித்தாா். உதவி மேலாளா் ஹரிதாஸ் வரவேற்றாா். வங்கியின் முதன்மை மேலாளா் ஸ்ரீராமன் பங்கேற்று, வங்கி வாடிக்கையாளா்கள், ஊழியா்கள், பொதுமக்களுக்கு நிலவேம்புக் குடிநீா் வழங்கினாா் (படம்). நிகழ்ச்சியில் 500 பேருக்கு நிலவேம்புக் குடிநீா் வழங்கப்பட்டது.