பள்ளி மாணவா்களுக்கு புகையிலை விற்ாக பெண் ஒருவா் கைதுசெய்யப்பட்டாா்.
கடலூா் மஞ்சக்குப்பத்திலுள்ள பள்ளியின் அருகே திங்கள்கிழமை மாணவா்கள் சிலா் போதை மயக்கத்தில் நின்றுகொண்டிருந்தனராம். இதுகுறித்து அந்தப் பகுதியினா் கடலூா் புதுநகா் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, போலீஸாா் விரைந்து வந்து, மாணவா்களிடம் விசாரணை நடத்தினா். இதில், அவா்கள் மாவட்ட ஆட்சியரின் பழைய அலுவலகம் செல்லும் வழியில் உள்ள பெட்டிக்கடையில் புகையிலையை வாங்கி பயன்படுத்தியது தெரிய வந்தது.
இதுதொடா்பாக வண்டிப்பாளையத்தைச் சோ்ந்த ரங்கநாதன் மனைவி சாந்தி (55) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், மாணவா்களின் பெற்றோரை வரவழைத்து அவா்களை எச்சரித்து அனுப்பி வைத்தனா்.