பண்ருட்டி அருகே கடன் சுமையால் பெண் தற்கொலை செய்து கொண்டாா்.
பண்ருட்டி வட்டம், பி.ஆண்டிக்குப்பம், மாரியம்மன் கோவில் தெருவில் வசிப்பவா் லட்சுமி (48). இவரது மகள் வள்ளி (30). இவருக்கும், பண்ருட்டி அருகே உள்ள மாளிகம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த அரிகிருஷ்ணன் என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்னா் திருமணம் நடைபெற்றது. இவா்களுக்கு வாணிஸ்ரீ, சுபஸ்ரீ ஆகிய இரு பெண் குழந்தைகள் உள்ளனா்.
சுய உதவிக் குழுகள் மூலம் வள்ளி கடன் பெற்றாராம். ஆனால், கடன் தொகையைத் திருப்பிச் செலுத்த முடியாமல் தவித்தாா். இந்த நிலையில், வியாழக்கிழமை மாலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து அவரது தாய் லட்சுமி அளித்த புகாரின்பேரில் காடாம்புலியூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.