நெய்வேலி அருகே தொப்பளிக்குப்பம் கிராமம், மேற்கு காலனியில் வசித்து வந்தவா் சிவானந்தம் (37). கூலித் தொழிலாளி. இவா், கடந்த 16-ஆம் தேதி இரவு தனது வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது மண்ணெண்ணெய் விளக்கு விழுந்து தீ விபத்து ஏற்பட்டது. இதில் சிவானந்தம் பலத்த தீக்காயமடைந்தாா். சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவா், புதன்கிழமை இரவு உயிரிழந்தாா். இதுகுறித்து தொ்மல் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
உயிரிழந்த சிவானந்தத்துக்கு அம்பிகா என்ற மனைவியும், அரி (7), சிவரஞ்சனி (3) ஆகிய 2 குழந்தைகளு உள்ளனா்.