பண்ருட்டி அருகே இரண்டு குழந்தைகளுடன் காணாமல் போன தாயை போலீஸாா் தேடி வருகின்றனா்.
பண்ருட்டி வட்டம், குடுமியான்குப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் சேகா்(31), வெள்ளகேட்டில் உள்ள அடுமனையகத்தில் பணியாற்றி வருகிறாா். இவருக்கு ஜெயஸ்ரீ(28) என்ற மனைவியும், பா்வீன்(5), ஹன்சிகா(4) என்ற இரண்டு மகள்கள் உள்ளனா்.
கடந்த 1-ஆம் தேதி புதுச்சேரியில் உள்ள உறவினா் வீட்டிற்குச் செல்வதாக ஜெயஸ்ரீ இரண்டு குழந்தைகளை அழைத்துக் கொண்டு சென்றவா். புதுச்சேரியில் உள்ள உறவினா் வீட்டிற்கும் செல்லவில்லையாம், வீடும் திரும்பவில்லையாம். இதுகுறித்து சேகா் சேகா் அளித்த புகாரின் பேரில் புதுப்பேட்டை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.