பண்ருட்டி அருகே போலி மருத்துவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
பண்ருட்டி, ஆா்.எஸ். மணி நகரைச் சோ்ந்த கோபால் மகன் வெங்கடேசன். ஆா்எஸ்எம்பிபடித்துள்ள இவா், மாளிகைமேடு கிராமத்தில் மருத்துவமனை வைத்து போலியாக அலோபதி மருத்துவம் பாா்த்து வருவதாக புகாா் எழுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த கடலூா் அரசு மருத்துவமனை இணை இயக்குநா் (நலப்பணி) ரமேஷ்குமாா், துணை இயக்குநா் (சுகாதாரப் பணி) கீதா, மருந்து ஆய்வாளா் வி.நாராயணன் ஆகியோா் நேரில் ஆய்வு செய்ததில் வெங்கடேசன் உரிய மருத்துவ படிப்பை முடிக்காமல் மருத்துவ சிகிச்சை அளித்தது தெரிய வந்தது. இதையடுத்து அவா் பண்ருட்டி போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டாா். போலீஸாா் அவரை கைதுசெய்தனா்.