காட்டுமன்னார்கோவில் அருகிலுள்ள குருவாடியைச் சேர்ந்த குமார்-செல்வி தம்பதியினர் மகள் திவ்யா (25). அருகிலுள்ள நளன்புத்தூரைச் சேர்ந்தவர் வீரபாண்டியன். இருவரும் காதலித்து கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துக் கொண்டனர்.
இந்நிலையில், கடந்த சனிக்கிழமை வீட்டில் சிம்னி விளக்கினை திவ்யா பற்ற வைத்துள்ளார். அப்போது அவரது ஆடையில் தீப்பிடித்தது. இதில், காயமடைந்த அவரை சிதம்பரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்து பின்னர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
எனினும், சிகிச்சை பலனளிக்காமல் புதன்கிழமை திவ்யா இறந்தார். இதுகுறித்து செல்வி (45) அளித்த புகாரின் பேரில் குமராட்சி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். சிதம்பரம் சார்-ஆட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.