சிதம்பரம் நடராஜர் கோயில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா புதன்கிழமை சுவாமி தரிசனம் செய்தார்.
மக்களவைத் தேர்தல் பிரசாரத்துக்கு சிதம்பரம் வந்த அவர், நடராஜர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பின்னர், செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகம் முழுவதும் எல்லா தொகுதிகளிலும் மிகப்பெரிய எழுச்சியைக் காணமுடிகிறது. அதிமுக கூட்டணிக்கு மக்கள் பெரும் ஆதரவு தெரிவிக்கின்றனர். இந்தக் கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவது உறுதி. தேமுதிக தலைவர் விஜயகாந்த் விரைவில் பிரசாரத்துக்கு வருவார்.
காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அள்ளி விசி இருக்கிறது. சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சந்திரசேகர் அமோக வெற்றி பெறுவார். நிச்சயம் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராவார் என்றார் அவர். முன்னதாக கோயிலுக்கு வந்த பிரமலதாவுக்கு கோயில் பொது தீட்சிதர்கள் பூரண கும்ப மரியாதை அளித்தனர். மாவட்ட தேமுதிக பொறுப்பாளர் சிவகொழுத்து, மாநில துணைச் செயலர் உமாநாத், மாவட்ட அவை தலைவர் பாலு, மாநில செயற்குழு உறுப்பினர் தமிழரசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.