அரியலூர் மாவட்டம், மேலாணிக்குழி புதுவடக்குத் தெருவைச் சேர்ந்த சிவகாமி (70) அண்மையில் காலமானார். இவரது கண்கள் சிதம்பரம் தன்னார்வ ரத்த தானக் கழகம் சார்பில் தானமாகப் பெறப்பட்டு புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இதற்கான ஏற்பாடுகளை ரத்த தானக் கழகத் தலைவர் எஸ்.ராமச்சந்திரன், உறுப்பினர் திருமுருகன், காட்டுமன்னார்கோவில் அரிமா சங்க நிர்வாகிகள் செந்தில்குமார், இளையராஜா, முத்துக்குமாரசாமி, சிவகுருநாதன் ஆகியோர் செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், சின்னஅகரம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சிவகாமி (45) சனிக்கிழமை காலமானார். இவரது கண்கள் சிதம்பரம் தன்னார்வ ரத்த தானக் கழகம் சார்பில் தானமாகப் பெறப்பட்டு புதுச்சேரி மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கண் வங்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை ரத்த தானக் கழகத் தலைவர் எஸ்.ராமச்சந்திரன், செஞ்சி அரிமா சங்க நிர்வாகிகள் இளங்கோவன், செயலர் சேகர், பொருளாளர் பன்னீர், மாவட்டத் தலைவர் அசோக் ஆகியோர் செய்தனர்.