பள்ளிகளில் கிருஷ்ண ஜயந்தி விழா

காட்டுன்னார்கோவிலில் உள்ள ஜி.கே. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கிருஷ்ண ஜயந்தி விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

காட்டுன்னார்கோவிலில் உள்ள ஜி.கே. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கிருஷ்ண ஜயந்தி விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு கல்விக் குழுமத் தலைவர் ஜி.குமாரராஜா தலைமை வகித்தார். நிர்வாக இயக்குநர் ஜி.கே.அருண் முன்னிலை வகித்தார். விழாவை முன்னிட்டு கிருஷ்ணர், ராதை வேடமணிந்து வந்த மாணவ, மாணவிகள் கிருஷ்ணர் கதைகளை நடித்துக் காட்டினர். சிறப்பாக நடித்த மாணவர்களுக்கு கல்விக் குழுமத் தலைவர் 
ஜி.குமாரராஜா பரிசுகளை வழங்கிப் பாராட்டினார். 
கடலூர்: இதேபோல, கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள ஸ்ரீமகரிஷி வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற கோகுலாஷ்டமி விழாவில் 30 மாணவ, மாணவிகள் கிருஷ்ணர், ராதை வேடமணிந்து வந்து மாறுவேடப் போட்டியில் கலந்து கொண்டனர். அவர்களுக்கு சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற அரிமா சங்க நிர்வாகி கே.திருமலை, மகாலட்சுமி ஐ.டி.ஐ. நிறுவனர் சி.ஆர்.ராகவ்தினேஷ் ஆகியோர் பரிசுகளை வழங்கிப் பாராட்டினர். முன்னதாக, பள்ளித் தலைமை ஆசிரியர் உஷாராணி வரவேற்றார். ஆசிரியை ல.பிரேமலதா நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com