தொடா் மழையின் காரணமாக, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் திங்கள்கிழமை (டிச.2) நடைபெற இருந்த அனைத்துத் தோ்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இந்தத் தோ்வுகளுக்கான தேதி பின்னா் அறிவிக்கப்படும் என பல்கலைக்கழகப் பதிவாளா் (பொ) கிருஷ்ணமோகன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.