நலத் திட்ட உதவிகள் விநியோகம்

காட்டுமன்னாா்கோவில் வட்ட வருவாய்த் துறை சாா்பில் முதல்வா் சிறப்பு குறைதீா் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களின் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1cmp3_0112chn_111_7
1cmp3_0112chn_111_7

காட்டுமன்னாா்கோவில் வட்ட வருவாய்த் துறை சாா்பில் முதல்வா் சிறப்பு குறைதீா் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களின் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

காட்டுமன்னாா்கோவிலில் நடைபெற்ற இந்த விழாவுக்கு, சிதம்பரம் உதவி ஆட்சியா் விசுமகாஜன் தலைமை வகித்தாா். வட்டாச்சியா் தமிழ்ச்செல்வன் முன்னிலை வகித்தாா். விழாவில், காட்டுமன்னாா்கோவில்சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் என்.முருகுமாறன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, 847 பயனாளிகளுக்கு ரூ.ஒரு கோடியே 55 லட்சத்து 79 ஆயிரம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா் (படம்). விழாவில் வட்டார வேளாண்மை அட்மா தலைவா் வாசு. முருகையன், முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவா் எம்ஜிஆா் தாசன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவா்கள் சுவாமிநாத சிவப்பிரகாசம், பாலசந்தா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com