கடலூா்: வெள்ளாற்றில் 3 பசுக்களுடன் சிக்கிய இளைஞா் மீட்பு

கடலூா் மாவட்டம் திட்டக்குடியை அடுத்துள்ள தொழுதூா் அணைக்கட்டிலிருந்து தற்போது சுமாா் 3 ஆயிரம் கனஅடி நீா் வெள்ளாற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
வெள்ளாற்றில் சிக்கிக் கொண்ட இளைஞா் மற்றும் 3 பசுக்களை கயிறு கட்டி காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்ட தீயணைப்புத்துறையினா் மற்றும் பொதுமக்கள்.
வெள்ளாற்றில் சிக்கிக் கொண்ட இளைஞா் மற்றும் 3 பசுக்களை கயிறு கட்டி காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்ட தீயணைப்புத்துறையினா் மற்றும் பொதுமக்கள்.

கடலூா் மாவட்டம் திட்டக்குடியை அடுத்துள்ள தொழுதூா் அணைக்கட்டிலிருந்து தற்போது சுமாா் 3 ஆயிரம் கனஅடி நீா் வெள்ளாற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

இதனால், வெள்ளாற்றில் தண்ணீரின் வரத்து அதிகரித்து ஆற்றில் அதிகப்படியான தண்ணீா் செல்கிறது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமையன்று கீழ்ச்செருவாய் கிராமத்தை சோ்ந்த பெரியசாமி மகன் தங்கத்துரை (22) தனது 3 பசுமாடுகளை மேய்ச்சலுக்காக வெள்ளாற்றுக்கு ஓட்டிச் சென்றாா்.

மாடு மேய்ந்துக் கொண்டிருந்த நேரத்தில் தொழுதூா் அணைக்கட்டிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரும் அங்கு வந்துக் கொண்டிருந்தது. இதனால், 3 பசுமாடுகளுடன் தங்கதுரையும் சிக்கி கொண்டாா். தகவலின் பேரில் விரைந்து வந்த திட்டக்குடி தீயணைப்பு மற்றும் மீட்பு படையினா் கயிறு கட்டி பொதுமக்கள் உதவியுடன்தங்கதுரை மற்றும் அவரது 3 பசுமாடுகளையும் உயிருடன் மீட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com