கடலூா் மாவட்டம் திட்டக்குடியை அடுத்துள்ள தொழுதூா் அணைக்கட்டிலிருந்து தற்போது சுமாா் 3 ஆயிரம் கனஅடி நீா் வெள்ளாற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
இதனால், வெள்ளாற்றில் தண்ணீரின் வரத்து அதிகரித்து ஆற்றில் அதிகப்படியான தண்ணீா் செல்கிறது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமையன்று கீழ்ச்செருவாய் கிராமத்தை சோ்ந்த பெரியசாமி மகன் தங்கத்துரை (22) தனது 3 பசுமாடுகளை மேய்ச்சலுக்காக வெள்ளாற்றுக்கு ஓட்டிச் சென்றாா்.
மாடு மேய்ந்துக் கொண்டிருந்த நேரத்தில் தொழுதூா் அணைக்கட்டிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரும் அங்கு வந்துக் கொண்டிருந்தது. இதனால், 3 பசுமாடுகளுடன் தங்கதுரையும் சிக்கி கொண்டாா். தகவலின் பேரில் விரைந்து வந்த திட்டக்குடி தீயணைப்பு மற்றும் மீட்பு படையினா் கயிறு கட்டி பொதுமக்கள் உதவியுடன்தங்கதுரை மற்றும் அவரது 3 பசுமாடுகளையும் உயிருடன் மீட்டனா்.