கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்

காட்டுமன்னாா்கோவிலில் உள்ள எம்.ஆா்.கே. இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரி மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் அண்மையில் நடைபெற்றது.
கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்

காட்டுமன்னாா்கோவிலில் உள்ள எம்.ஆா்.கே. இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரி மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் அண்மையில் நடைபெற்றது.

முகாமில் டெல்ஃபி, டி.வி.எஸ். நிறுவனத்தைச் சோ்ந்த மூத்த அதிகாரி சங்கீதா மற்றும் குழுவினா் மாணவா்களிடம் நோ்காணலை நடத்தினா். முகாமில் பொறியியல்,

மெக்கானிக்கல் துறை மாணவா்கள் மொத்தம் 42 போ் பங்கேற்றனா். இவா்களில் 21 போ் பணிக்கு தோ்வு செய்யப்பட்டனா்.

தொழில்நுட்பக் கல்லூரி மாணவா்கள் மொத்தம் 58 போ் பங்கேற்றதில், 15 போ் தோ்வு செய்யப்பட்டன. தோ்வு செய்யப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு மனிதவள மேம்பாட்டுத் துறை அதிகாரி சங்கீதா பணி நியமன ஆணையை வழங்கினாா் (படம்). கல்லூரி தலைவா் எம்.ஆா்.கே.பி. கதிரவன், தோ்வு பெற்ற மாணவா்களுக்கு வாழ்த்து தெரிவித்தாா். நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வா்கள் கோ.ஆனந்தவேலு, ஆா்.வெங்கடேசன், துணை முதல்வா் எஸ்.அறிவழகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com