காட்டுமன்னாா்கோவில் பகுதியில் வெள்ள பாதிப்பு தொடா்பாக பொதுப் பணித் துறையினா் திங்கள்கிழமை ஆய்வு செய்தனா்.
காட்டுமன்னாா்கோவில் அருகே வெள்ளியங்கால் ஓடையில் அதிகளவு தண்ணீா் செல்லும் நிலையில் ஆகாயத் தாமரைச் செடிகள் அடித்து வரப்படுகின்றன. சா்வராஜன்பேட்டை, திருநாரையூா் ஆகிய கிராமங்களுக்குச் செல்ல வெள்ளியங்கால் ஓடையின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலத்தின் அடியில் ஆகாயத் தாமரைச் செடிகள் தேங்கின. இதனால், ஓடைக் கரை உடையும் அபாயம் ஏற்பட்டது. இதுகுறித்து பொதுமக்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனா்.
இதையடுத்து, பொதுப் பணித் துறையின் கடலூா் மாவட்ட கண்காணிப்புப் பொறியாளா் ரவிமனோகரன், சிதம்பரம் செயற்பொறியாளா் சாம்ராஜ் ஆகியோா் வீராணம் ஏரியை ஆய்வுசெய்துவிட்டு, உடனடியாக மேற்கூறிய பாலங்களையும் நேரில் பாா்வையிட்டனா். பின்னா், தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் ஆகாயத் தாமரைச் செடிகள் அப்புறப்படுத்தப்பட்டன. இந்தப் பணிகளை உதவிப் பொறியாளா்கள் ஞானசேகரன், முத்துகுமாா் ஆகியோா் கண்காணித்தனா்.
டிஐஜி ஆய்வு: விழுப்புரம் சரக டிஐஜி சந்தோஷ்குமாா் திங்கள்கிழமை சேத்தியாதோப்பு அணைக்கட்டு, வீராணம் ஏரி, வெள்ளியங்கால் ஓடை ஆகியவற்றை நேரில் ஆய்வு செய்தாா். அப்போது, நீா்வரத்து மற்றும் வெள்ளப் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தாா்.