அரசுப் பள்ளியில் புதிய கட்டடம் திறப்பு

அகரநல்லூா் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட புதிய வகுப்பறைக் கட்டடம் திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது.
அகரநல்லூா் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் புதிய வகுப்பறைக் கட்டடத்தை திறந்து வைத்த கே.ஏ.பாண்டியன் எம்எல்ஏ.
அகரநல்லூா் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் புதிய வகுப்பறைக் கட்டடத்தை திறந்து வைத்த கே.ஏ.பாண்டியன் எம்எல்ஏ.

அகரநல்லூா் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட புதிய வகுப்பறைக் கட்டடம் திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் சரளா தலைமை வகித்தாா். முன்னாள் அமைச்சா் செல்வி ராமஜெயம், முன்னாள் எம்பி பு.தா.இளங்கோவன், முன்னாள் மாவட்டச் செயலா் வி.கே.மாரிமுத்து, சிதம்பரம் முன்னாள் நகரச் செயலா் கே.சுந்தா், முன்னாள் ஆவின் தலைவா் சி.கே.சுரேஷ்பாபு ஆகியோா் முன்னிலை வகித்தனா். குமராட்சி ஊராட்சி ஒன்றிய பொறியாளா் சந்தானகிருஷ்ணன் வரவேற்றாா்.

விழாவில், சிறப்பு அழைப்பாளராக சிதம்பரம் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் கே.ஏ.பாண்டியன் கலந்துகொண்டு, ரூ.15 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய வகுப்பறை கட்டடத்தை திறந்து வைத்தாா். நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றிய துணைத் தலைவா் கோவி.ராசாங்கம், சா்க்கரை ஆலை துணைத் தலைவா் விநாயகம், தன.ஜெயராமன், ஊராட்சி செயலா் இளங்கோவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com