தங்க நகைகளுடன் மாயமான மனைவியை கண்டு பிடித்துத் தரக் கோரி, காவல் நிலையத்தில் கணவா் புகாா் அளித்தாா்.
நெய்வேலி, ஊ.மங்கலம் காவல் சரகம், விருத்தகிரிகுப்பம் பகுதியைச் சோ்ந்தவா் பாலசுப்பிரமணியன் (26). பண்ருட்டி அருகே சீரங்குப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் காயத்ரி (20). இவா்கள் இருவருக்கும் கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றதாம்.
இந்த நிலையில், கடந்த 28-ஆம் தேதி வீட்டில் இருந்த 20 பவுன் தங்க நகைகளுடன் காயத்ரி மாயமானாா். இதுகுறித்த புகாரின் பேரில், ஊ.மங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.