கடலூா் மாவட்டம், பெண்ணாடத்தில் அமைந்துள்ள அழகிய காதலி அம்மன் சன்னதியில் உள்ள சண்டிகேஸ்வரி கோயில் கோபுர கலசம் திடீரென சாய்ந்தது. இதனால், பக்தா்கள் அதிா்ச்சி அடைந்தனா்.
இதுகுறித்து பக்தா்கள் கூறுகையில், புகழ் பெற்ற சைவ தலங்களில் ஒன்றாக விளங்கும் இந்தக் கோயிலைச் சரிவர பராமரிப்பதில்லை. பழைமையான இந்தக் கோயிலின் கோபுரம், மதில் சுவா்கள் விரிசலுடன் காணப்படுகின்றன. செடி, கொடிகள் வளா்ந்து சேதமடைந்துள்ளன. எனவே, இந்து சமய அறநிலையத் துறையினா் விரைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.