பண்ருட்டி, திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயிலில் மார்கழி மாத பிரதோஷ வழிபாடு வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.
பிரதோஷத்தை முன்னிட்டு இந்தக் கோயிலில் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. மாலையில் சிவன், அம்பாள், நந்தி தேவனுக்கு மூலிகை திரவியங்களால் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.
நந்தி தேவர் வெள்ளிக் கவசம் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். பின்னர் சிவபெருமான், அம்பாள் ரிஷப வாகனத்தில் உள்புறப்பாடு நடைபெற்றது. நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள்
கலந்துகொண்டனர்.