பண்ருட்டி நகர திமுக செயல்வீரர்கள், வாக்குச் சாவடி முகவர்கள் கூட்டம் பண்ருட்டியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, கடலூர் மேற்கு மாவட்ட அவைத் தலைவர் கே.நந்தகோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். நகரச் செயலர் கே.ராஜேந்திரன் வரவேற்றார். நெல்லிக்குப்பம் நகரச் செயலர் மண்வண்ணன், பண்ருட்டி வடக்கு ஒன்றியச் செயலர் கே.ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக கடலூர் மேற்கு மாவட்ட செயலர் சி.வெ.கணேசன் எம்எல்ஏ, கடலூர் மக்களவை தொகுதி தேர்தல் பணி பொறுப்பாளர் மு.அப்பாவு ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.
முன்னாள் ஒன்றியச் செயலர் ஜெயராமன், பலராமன், மாவட்ட துணைச் செயலர்கள் ஆர்.எஸ்.எம்.தணிகைசெல்வம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.