மார்கழி மாத அமாவாசையை முன்னிட்டு பண்ருட்டி, திருவதிகையில் அமைந்துள்ள சரநாராயணப் பெருமாள் கோயிலில் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இந்த நிகழ்வை முன்னிட்டு, ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து கொண்டுவரப்பட்ட ஆண்டாள் மாலை, கிளியை அணிந்து மூலவர் சரநாராயணப் பெருமாள், ஆண்டாள் ரங்கமன்னராகவும், ஹேமாம்புஜவல்லி தாயார் வெள்ளி அங்கி சிறப்பு அலங்காரத்திலும் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். உற்சவர் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் கண்ணாடி அறையில் காட்சியளித்தார்.