ஆன்மிக நடைபயணம்

உலக நன்மை வேண்டி பண்ருட்டியில் சிவ தொண்டர்கள் ஞாயிற்றுக்கிழமை ஆன்மிக நடைபயணம் மேற்கொண்டனர்.

உலக நன்மை வேண்டி பண்ருட்டியில் சிவ தொண்டர்கள் ஞாயிற்றுக்கிழமை ஆன்மிக நடைபயணம் மேற்கொண்டனர்.
திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயிலில் இருந்து ஆன்மிக நடைபயணம் புறப்பட்டது. முன்னதாக, கோயிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர், ஓதுவார் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்ற நடைபயணத்தில் 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற நடைபயணம் புதுப்பேட்டையில் அடுத்துள்ள சித்தவட மடம் சிதம்பரேஸ்வரர் கோயிலில் முடிவடைந்தது. அங்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com