சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக நாட்டு நலப் பணித் திட்டம், இசைத் துறை, அங்கம் 25 சார்பில் மரக்கன்று நடும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இசைத்துறை வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மரக் கன்றுகள் நடும் பணியை நுண்கலைப் புல முதல்வர் கே.முத்துராமன், நாட்டு நலப் பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் பி.செளந்தரபாண்டியன் ஆகியோர் தொடக்கி வைத்தனர். இசைத் துறைப் பேராசிரியர்கள் துரை.பார்த்திபன், கே.வெங்கடேசன் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திட்ட அலுவலர் கே.பிரகாஷ் செய்திருந்தார்.