நெய்வேலி அருகே டிப்பர் லாரி மோதியதில், பைக்கில் சென்ற அரசு மருத்துவர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
நெய்வேலி வட்டம் 20, எல்ஐசி குடியிருப்பில் வசித்து வந்தவர் வெங்கடேசன் (30). இவர், மங்கலம்பேட்டை அடுத்துள்ள மாத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராகப் பணியாற்றி
வந்தார்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு வட்டம் 5 -இல் உள்ள திரையரங்கில் திரைப்படம் பார்த்துவிட்டு, பைக்கில் வீடு திரும்பி, சாம்பல் ஏரி அருகே சென்ற போது, அந்த வழியாக பின்னால் வந்த டிப்பர் லாரி பைக் மீது மோதியதில் வெங்கடேசன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்த தெர்மல் போலீஸார் அங்கு வந்து, சடலத்தை மீட்டு, உடல் கூறாய்வுக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து விசாரணை நடத்தி
வருகின்றனர்.