தூய்மை இந்தியா திட்ட விழிப்புணர்வுக் கருத்தரங்கம்

சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தூய்மை இந்தியா திட்ட விழிப்புணர்வுக் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தூய்மை இந்தியா திட்ட விழிப்புணர்வுக் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.
மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறை, சிதம்பரம் நகராட்சி நிர்வாகம் இணைந்து நடத்திய இந்தக் கருத்தரங்கில், மத்திய அரசின் மக்கள் தொடர்பு கள அலுவலக புதுச்சேரி பிரிவு உதவி இயக்குநர் சிவக்குமார் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பேசினார். பள்ளித் தாளாளர் வீனஸ் எஸ்.குமார் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் ரூபியாள்ராணி வரவேற்றார்.
மக்கள் தொடர்பு கள உதவியாளர் தியாகராஜன், சிதம்பரம் நகராட்சி சுகாதார ஆய்வாளர் தர்மராஜ், தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர் சுதாகர், பள்ளிக் கல்வி அதிகாரி ஜி.மகேஷ்சுந்தர் ஆகியோர் பேசினர். நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு விநாடி - வினா நிகழ்ச்சி நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. சுகாதார ஆய்வாளர் தர்மராஜா நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com