விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா

விருத்தாசலம் அருகே மங்கலம்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா (படம்) வியாழக்கிழமை நடைபெற்றது. 

விருத்தாசலம் அருகே மங்கலம்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா (படம்) வியாழக்கிழமை நடைபெற்றது. 
நிகழ்ச்சிக்கு, பள்ளித் தலைமை ஆசிரியர் டி.செல்வராஜ் தலைமை வகித்தார். பெற்றோர்-ஆசிரியர் கழக துணைத் தலைவர் தாமோதரன், உதவி தலைமை ஆசிரியர் சுரேஷ்குமார், ஆசிரியர் செந்தில்நாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ஏ.நூர்முகம்மது 627 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார். 
பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் ராதாகிருஷ்ணன், எம்.முஜிபுர் ரஹ்மான், கோ.மணி, பள்ளி ஆசிரியர்கள் பி.தேவநாதன், பி.செந்தமிழ்செல்வன், பாபாஜி, வீரமணி, வேல்முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தமிழ் ஆசிரியை லீமா ரோஸ் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com