டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாள் விடுமுறை

டாஸ்மாக் மதுக் கடைகளுக்கு ஜனவரி மாதம் 3 நாள்களுக்கு விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் தெரிவித்தார்.


டாஸ்மாக் மதுக் கடைகளுக்கு ஜனவரி மாதம் 3 நாள்களுக்கு விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஜன.16-ஆம் தேதி (புதன்கிழமை) திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு மாவட்டத்திலுள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கும் விடுமுறை விடப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, ஜன.21-ஆம் தேதி (திங்கள்கிழமை) வடலூர் ராமலிங்கர் நினைவு நாள், ஜன.26-ஆம் தேதி (சனிக் கிழமை) குடியரசு தினம் ஆகிய 3 தினங்களில் மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான சில்லரை விற்பனைக் கடைகள், மதுபானக் கூடங்கள், ஹோட்டல் பார்களில் மதுபானங்கள் ஏதும் விற்கப்படாமல் மூடியிருக்க வேண்டும்.
மதுபானக் கடைகளின் மேற்பார்வையாளர்கள் மேற்கண்ட 3 தினங்களிலும் மாவட்டத்தில் மது விற்பனை நடைபெறாமல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். இதனை மீறி எவரேனும் மதுபானக் கடைகளை திறந்து மதுபானங்களை விற்றாலோ, மது அருந்தும் கூடங்களை திறந்து வைத்திருந்தாலோ சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர், டாஸ்மாக் பார் உரிமையாளர்கள், ஹோட்டல் பார் உரிமையாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் அதில் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com